ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், சுதந்திர தினத்தின்போது தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளை கலந்து கொள்ளுமாறு கடந்த 14-ந்தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றதற்காக நன்றி தெரிவித்துள்ளார் கமல். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது :
தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற கிராமசபை கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நமது சுதந்திரதினத்தை சரியான புரிதலுடன் நாம் கொண்டாடுகிறோம்.
இதுப்போன்ற கூட்டங்களில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நாட்டின் வளர்ச்சியின் எதிரிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் கவனத்துடனும், விழிப்புடனும் இருப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.