தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், சுதந்திர தினத்தின்போது தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளை கலந்து கொள்ளுமாறு கடந்த 14-ந்தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றதற்காக நன்றி தெரிவித்துள்ளார் கமல். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது :
தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற கிராமசபை கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நமது சுதந்திரதினத்தை சரியான புரிதலுடன் நாம் கொண்டாடுகிறோம்.
இதுப்போன்ற கூட்டங்களில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நாட்டின் வளர்ச்சியின் எதிரிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் கவனத்துடனும், விழிப்புடனும் இருப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.