'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த்தை வைத்து பல இயக்குனர்கள் படம் இயக்கியிருக்கிறார்கள். ஆனால், ஒரு இளம் இயக்குனரை நம்பி தனது அடுத்தடுத்த படத்தைக் கொடுத்த ரஜினிகாந்த்தை திரையுலகம் இப்போதும் ஆச்சரியமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.
'கபாலி, காலா' என இரண்டு படங்களை பா. ரஞ்சித் என்ற இளம் இயக்குனரை நம்பி தன்னை முழுமையாக ஒப்படைத்தார் ரஜினிகாந்த். அந்தப் படங்கள் ரஜினிகாந்த் படங்கள் என்று சொல்லப்பட்டதை விட பா.ரஞ்சித் படங்கள் என்றுதான் அதிகம் பேசப்பட்டன. இருந்தாலும், ரஜினிகாந்த் தரப்பில் அதைப் பெரிதாகக் கருதவில்லை. இரண்டு படங்களுமே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலி,ஒளிக்கப்பட்ட படங்களாக இருந்தன.
'காலா' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித், ஆமிர்கான் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக ஒரு செய்தி வெளியானது. அவர்கள் இருவரும் சந்தித்தது உண்மைதான் என்றும் பா.ரஞ்சித், ஆமிர்கான் நடிக்கும் அந்த ஹிந்திப் படத்தை இயக்கலாம் என்றும் சொன்னார்கள். ஆனால், இப்போது மீண்டும் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை பா.ரஞ்சித் இயக்கப் போகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
'காலா' படம் நஷ்டம் என்று திரையுலகத்தில் உள்ள பலர் சொல்கிறார்கள். ஆனால், படத் தயாரிப்பு நிறுவனமோ அவர்களுக்கு லாபம்தான் என்றார்கள். சிலபல அரசியல் காரணங்களால் தான் 'காலா' பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றும் ரஜினி நம்புவதாகவும், அதனால்தான் அவர் மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க ஆசைப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு பக்கம் பேசுகிறார்கள்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில வாரங்களில் முடிவடைய வாய்ப்புள்ளது. அந்தப் படம் முடிவதற்குள் ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது பா.ரஞ்சித் இயக்கும் படமா என்பதுதான் கேள்வியே...?.