'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
சமீபத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றபோது, ஒரு பிரபல அரசியல் கட்சி, அந்த கட்சியில் சேருவதற்காக தன்னிடம் ரூ. 100 கோடி பேரம் பேசியதாக ஒரு தகவல் வெளியிட்டிருந்தார் கமல்.
அவரைத் தொடர்ந்து ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கலந்து கொண்டபோது நடிகர் பார்த்திபனும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், ஒரு பிரபல அரசியல் கட்சியின் தலைவர், அவருடைய கட்சியில் சேர்ந்து விடுமாறு என்னை அழைத்தார். அதற்காக எனக்கு ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசினார். ஆனால் நான், எனக்கு அரசியல் தெரியாது. அதில் ஈடுபடவும் விரும்பவில்லை என்று மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் பார்த்திபன்.