ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துருவங்கள் 16 படத்தின் மூலம் புகழ்பெற்றவர் கார்த்திக் நரேன். 22வது வயதில் ஒரு ஹிட் படம் கொடுத்ததன் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டார். யாரிடமும் சினிமா கற்காத கார்த்திக் நரேன், இயக்குனர் கவுதம் மேனனை மானசீக குருவாக கொண்டிருப்பதாக கூறினார். அந்தப் படத்தை பார்த்த இயக்குனர் கவுதம் மேனன், அவரை பாராட்டியதோடு அவரது அடுத்த படத்தை தானே தயாரிப்பாதாக கூறினார். அதன்படி கவுதம் மேனன் தயாரிப்பில் தொடங்கப்பட்டது தான் நரகாசூரன். இதுவும் துருவங்கள் 16 போன்றே ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.
இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், அஷ்மிதா, இந்திரஜித், ஆத்மிகா நடித்தனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்தார், ரோன் ஏதன் யோகன் இசை அமைத்தார். முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கவுதம் மேனனால் படத்தை தொடர முடியவில்லை. அவருக்கு பொருளாதார சிக்கல். இது தொடர்பாக இயக்குனர் கவுதம் மேனனுக்கும், கார்த்திக் நரேனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் நின்றது.
சில மாதங்களுக்கு பிறகு பத்ரி கஸ்தூரி என்ற தயாரிப்பாளரைக் கொண்டு படத்தை முடித்தார் கார்த்திக் நரேன். பட வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருந்த நிலையில், தற்போது வருகிற 31ந் தேதி படம் வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.