கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டின் அடுத்த நட்சத்திர தம்பதியராக மாற இருப்பவர்கள் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே. இன்னும் தங்களை அதிகாரப்பூர்வமான காதலர்களாக அறிவித்து கொள்ளவில்லை என்றாலும் இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றி வருகின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
இத்தாலியில் வருகிற நவம்பர் 20-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்திற்கு, நெருங்கிய உறவினர்கள், ஒருசில நண்பர்கள் என மொத்தமே 30 பேரை மட்டும் தான் தான் அழைத்து செல்கிறார்களாம். திருமணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும், மும்பையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர்.