பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கேரளாவில் இதுவரை நடிகர் மம்முட்டி மற்றும் மஞ்சு வாரியர் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளனர். மற்ற திரையுலக பிரபலங்கள் நேரில் சொல்லாவிட்டாலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள். தற்போது நடிகர் ஜெயசூர்யாவும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
எர்ணாகுளம் மற்றும் ஆலுவா பகுதிகளில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்ற ஜெயசூர்யா அரிசி, உட்பட சில அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் இதுபற்றி அவர்கூறும்போது, இன்னும் 10-15 நாட்களில் நிலைமை ஓரளவு சரியாகிவிடும்.. அதன்பின் மீடியாக்கள் இவர்களை மறந்துவிட்டு அடுத்த வேலைகளுக்கு சென்று விடுவார். அப்போது இவர்களுக்கு இன்னும் உதவி தேவைப்படும்.. அந்தசமயத்தில் மீண்டும் மக்களுக்காக நேரில் வருவேன்" என கூறியுள்ளார் ஜெயசூர்யா.