பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ், அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என மிகப்பெரும் நட்சத்திரக்கூட்டமே நடித்துள்ள படம் - 'செக்கச் சிவந்த வானம்'.
லைகா புரொடக்ஷன்ஸுக்கு பர்ஸ்ட்காப்பி அடிப்படையில் மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ள படம். செக்கச் சிவந்த வானம் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் பாடல்களை மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
படம் இன்னும் தணிக்கைக்கே அனுப்பப்படவில்லை. அதற்குள் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதாவது செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தணிக்கைக்கு முன்னதாக படத்தின் வெளியீட்டு தேதியை லைகா அறிவிக்க என்ன காரணம்?
காலா படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் ரீபண்ட் கேட்டு பிரச்சனை செய்வதால், அவர்களை சமாதானப்படுத்துவதற்காகவே செக்கச் சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
அதாவது கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம் படங்களை குறைந்தவிலைக்கு தருவதாக ஏற்கனவே காலா பட விநியோகஸ்தர்களுக்கு வாக்கு கொடுக்கப்பட்டுள்ளது.