பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 ஆரம்பமாகி இன்னும் சில நாட்களில் இரண்டு மாதத்தைத் தொட உள்ளது. ஆனாலும், நிகழ்ச்சியில் கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் பரபரப்பை ஏற்படுத்துவது இல்லை. கடந்த சீசனில் ஓவியா, ஜுலி, ஆரவ், காயத்ரி, சக்தி, பிந்து மாதவி, ரைசா, சினேகன் என பலரும் ஒரு தனித் தன்மையுடன் இருந்தார்கள். ஒவ்வொருவரும் சில விஷயங்களால், செய்கைகளால் தனித் தனியே ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
ஆனால், இந்த இரண்டாவது சீசனில் பங்கேற்றுள்ள யாருக்குமே எந்தவிதமான தனித் தன்மையும் இல்லை என்பது நிகழ்ச்சியின் பெரும் மைனஸ் பாயின்டாக உள்ளது. கமல்ஹாசனும், பிக் பாஸும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும், ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடப் பார்த்தும், நிகழ்ச்சியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த முடியவில்லை. முதல் சீசனில் இருந்த ஒரு சுவாரசியம் இந்த இரண்டாவது சீசனில் இல்லை என்பதுதான் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கும் பலரது கருத்தாக உள்ளது.
நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனே வீட்டுக்குள் நுழைந்து, 'எவிக்ட்' ஆன பொன்னம்பலத்தின் பெயரை அறிவித்தார். அவர் வீட்டுக்குள் நுழைந்ததற்கும் ஒரு காரணத்தைச் சொன்னார். 'விஸ்வரூபம் 2' படத்தின் பிரமோஷனுக்காக தெலுங்கு பிக் பாஸ், மலையாள பிக் பாஸ் வீடுகளுக்குள் போனேன். பின்னர் தான் நமது வீட்டுக்குள் போகவில்லையே என்று உள்ளே வந்தேன் என்றார்.
முதல் சீசனில் 35வது நாளிலேயே 'வைல்ட் கார்டு' நுழைவில் பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். ஆனால், இந்த இரண்டாவது சீசனில் 57 நாட்கள் கடந்தும் இன்னும் எந்த ஒரு 'வைல்ட் கார்டு' நுழைவும் வரவில்லை. கடந்த சில நாட்களாக நடிகை கஸ்தூரி உள்ளே செல்லப் போகிறார் என்ற வதந்தி பரவியது. கடைசியில் அவரை அதை மறுத்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுவிட்டார். பிந்து மாதவி மட்டுமல்லாது சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண், காஜல் ஆகியோர் அடுத்தடுத்து 'வைல்டு கார்டு' மூலம் கடந்த சீசனில் நுழைந்தார்கள்.