அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
நடிகர் விக்ரம் மகன் துருவ் நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுடன் காரில் சென்றபோது தேனாம்பேட்டை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் 3 ஆட்டோக்கள் சேதமானது. ஒரு ஆட்டோ டிரைவர் காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். துருவை கைது செய்த போலீசார் சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர்.
இந்த நிலையில் விக்ரம் மகன் துருவ் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக செய்தி பரவியது. அவர் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோவும் இணைய தளத்தில் வைரலாக பரவியது. பலரும் விக்ரமை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டுள்ளனர். அதற்கு விளக்கம் தரும் பொருட்டு விக்ரம் ரசிகர் மன்றத் தலைவர் எம்.சூரிய நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார். இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.