ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் விஸ்வரூபம் 2ம் பாகத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்திருப்பதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
விஸ்வரூபம் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சிலர் இடையூறு செய்கிறார்கள். அது படத்திற்கு நல்ல விளம்பரத்தை தரும் என்று நம்புகிறேன். இந்த வெற்றிக்காக நிறைய நாள் காத்திருந்தோம். படத்தில் மக்கள் நீதி மையத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது படத்தின் கதையை பாதிக்காது. இனி வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் இந்த பாடலை பயன்படுத்துவோம்.
ஹே ராம், விருமாண்டி படங்களில் எனது கருத்து இருந்ததைபோல விஸ்வரூபத்திலும் எனது கருத்துக்களை சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றையும் தாண்டி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.