இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமீபத்தில் வெளியான காட்டுப்பய சார் இந்த காளி படத்தில் நடித்தவர் ஐரா. வட இந்தியாவைச் சேர்ந்த இவர், சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர். விளையாட்டு வீராங்கனையாக இருந்து நடிகை ஆனவர். விளையாட்டும், நடிப்பும் என் இரு கண்கள் என்கிறார் ஐரா. அவர் மேலும் கூறியதாவது:
படிக்கும்போதே டான்ஸ், நடிப்பு மீது ரொம்ப ஆர்வம். 2014 மிஸ் சவுத் இந்தியா போட்டியில் டைட்டில் வென்றதும் மீடியா பக்கம் வந்து விட்டேன். 50க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்தேன். அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. சிறு சிறு கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தேன். தாயம் என்ற படத்தின் முக்கியமான கேரக்டரில் நடித்தேன். அந்தப் படம் சரியாக போகவில்லை. இப்போது காட்டுப்பய சார் காளி படம் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது.
நான் ஒரு தடகள வீராங்கனை, ஓட்டப்பந்தயம், நீச்சல் போட்டிகளில் மாநில அளவில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விளையாட்டு உதவுகிறது. நான் வட இந்திய பெண்ணாக இருந்தாலும், பிறந்த வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். தமிழ் நன்றாக பேசவும், எழுதவும் தெரியும். அதனால் என் படங்களுக்கு நானே டப்பிங் பேசுவேன். வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் தொடர்ந்து நடிப்பேன். விளையாட்டையும் தொடர்வேன். நடிப்பும், விளையாட்டும் எனது இரண்டு கண்கள் மாதிரி என்கிறார் ஐரா.