‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
திமுக., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சிவகுமார், சூர்யா அஞ்சலி செலுத்தினர். வெளியூரில் இருந்ததால் கார்த்தி வரவில்லை. இந்நிலையில் சென்னை திரும்பிய கார்த்தி, மெரினாவில் உள்ள கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, கருணாநிதி பற்றி நிறைய விஷங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இடஒதுக்கீடு, பெண்களுக்கு சம உரிமை என பல விஷயங்களை செய்தவர். அப்பாவுடன் நெருக்கமாக இருந்தவர். நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்த உடன் அவரிடம் ஆசி வாங்க சென்றேன், அப்போது புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திமுக., தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
முன்னதாக திமுக., செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார் கார்த்தி. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செய்தார். அவருடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.