தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திமுக., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சிவகுமார், சூர்யா அஞ்சலி செலுத்தினர். வெளியூரில் இருந்ததால் கார்த்தி வரவில்லை. இந்நிலையில் சென்னை திரும்பிய கார்த்தி, மெரினாவில் உள்ள கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, கருணாநிதி பற்றி நிறைய விஷங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இடஒதுக்கீடு, பெண்களுக்கு சம உரிமை என பல விஷயங்களை செய்தவர். அப்பாவுடன் நெருக்கமாக இருந்தவர். நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்த உடன் அவரிடம் ஆசி வாங்க சென்றேன், அப்போது புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திமுக., தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
முன்னதாக திமுக., செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார் கார்த்தி. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செய்தார். அவருடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.