இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திமுக., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சிவகுமார், சூர்யா அஞ்சலி செலுத்தினர். வெளியூரில் இருந்ததால் கார்த்தி வரவில்லை. இந்நிலையில் சென்னை திரும்பிய கார்த்தி, மெரினாவில் உள்ள கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, கருணாநிதி பற்றி நிறைய விஷங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இடஒதுக்கீடு, பெண்களுக்கு சம உரிமை என பல விஷயங்களை செய்தவர். அப்பாவுடன் நெருக்கமாக இருந்தவர். நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்த உடன் அவரிடம் ஆசி வாங்க சென்றேன், அப்போது புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திமுக., தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
முன்னதாக திமுக., செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார் கார்த்தி. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செய்தார். அவருடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.