தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கதில் உருவாகி வரும் படம் செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ ராஜ் என ஒரு நட்சத்திர கூட்டமே நடிக்கிறார்கள்.
மல்டி ஹீரோ, ஹீரோயின் படமாக ஒரு சமூக பிரச்னையை மையமாக வைத்து ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ளது. ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். மணிரத்னமும், லைகாவும் இணைந்து தயாரித்துள்ளது.
கடந்த பிப்ரவரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் நிறைவடைந்தது. தற்போது எடிட்டிங், இசை கோர்ப்பு உள்ளிட்ட மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் வருகிற செப்., 28-ம் தேதி, செக்கச் சிவந்த வானம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.