ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
மம்முட்டி தற்போது தெலுங்கில் யாத்ரா எனும் படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கேரக்டரில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மலையாளத்தில் வளர்ந்துவரும் இளம் நடிகையும் மம்முட்டியுடன் ஒரு குட்டநாடன் பிளாக் என்கிற படத்தில் நடித்துள்ளவருமான அனு சித்தாரா, யாத்ரா படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று மம்முட்டியை சந்தித்துள்ளார்..
இதுகுறித்து கூறியுள்ள அனு சித்தாரா, தெலுங்குப்படம் ஒன்றிற்காக கதை கேட்க ஐதராபாத் வந்ததாகவும், அப்போது மம்முட்டியின் யாத்ரா படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அங்கே சென்று மம்முட்டியை சந்தித்ததாகவும் கூறியுள்ளார். படப்பிடிப்பில் மம்முட்டி மிக நீளமான தெலுங்கு வசனங்களை மனப்பாடம் செய்துகொண்டிருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டாராம்.
மேலும் வசனங்களின் முழு அர்த்தத்தையும் கேட்டு அறிந்துகொண்டு ஸ்பாட்டில் சிங்கிள் டேக்கில் அசத்தியதையும் கண்டு, தான் பிரமித்து போனதாகவும் கூறியுள்ளார் அனு சித்தாரா.