ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நியூயார்க் பிலிம் அகாடமியில் மேக்கிங் சினிமா படித்து விட்டு, வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் மனோஜ். குருசோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அனிஷா அம்புரோஸ், விசாகன், லென்ஸ் பட இயக்குனர் ஜேப்பி நடிக்கிறார்கள் வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் ரொட்ரிகோ ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. படம் பற்றி இயக்குனர் மனோஜ் கூறியதாவது:
தலைப்புக்கு ஏற்ற மாதிரி இது கேங்ஸ்டர் கதை தான். குரு சோமசுந்தரம் கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கிறார். அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் வாழ்க்கையில் துரோகம் என்கிற வஞ்சகம் தான் மிகப்பெரிய சக்தி, யார் எப்போது துரோகியாக மாறுவார்கள் என்பதை கணிக்க முடியாது. அதை கணிக்க முடிந்தவரோ தொடர்ந்து கேங்ஸ்டராக இருக்க முடியும், இல்லாவிட்டால் சீக்கிரமே அவன் கதை முடிந்து விடும்.
வெளிநாட்டில் படித்தாலும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடன் புறம்போக்கு படத்தில் துணை இயக்குனராக இருந்து பயிற்சி பெற்று தான் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். சென்னை, புதுச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. உலகில் 100 சதவிகிதம் நல்லவர்கள் யாரும் கிடையாது, 100 சதவிகிதம் கெட்டவர்கள் யாரும் கிடையாது. இதுதான் படம் சொல்லும் செய்தி. என்கிறார் மனோஜ்.