தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் எப்படியாவது இடம் பெற்று விட வேண்டும் என்பதற்காக, கடுமையாக முயற்சித்து வருகிறார், துல்கர் சல்மான்.
மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த, ஒகே கண்மணி படம் வெற்றி பெற்றாலும், அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடிக்கிறார்; இது, இளைஞர்களுக்கான படமாம். ரிது வர்மா என்ற நடிகை, துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். 'தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து, முன்னணி நடிகராவேன்' என, உறுதியாக கூறுகிறார், துல்கர் சல்மான்.