தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. திரையுலகத்தில் 15 வருடங்களையும், நாயகியாக 11 வருடங்களையும் கடந்துள்ள ஹன்சிகா, தற்போது துப்பாக்கிமுனை, 100 படங்களில் நடித்துள்ளார்.
இவர் அடுத்து நடிக்க இருக்கும் படம் 50வது படமாகும். இதை ஹன்சிகாவின் பிறந்தநாளான இன்று(ஆக.,9) தனுஷ், டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பதாக இருந்தது. ஆனால் அறிவிக்கவில்லை.
திமுக., தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவருக்கு ஏற்கனவே இரங்கல் தெரிவித்திருந்தார் ஹன்சிகா. தொடர்ந்து அவருக்கு மரியாதை செய்யும் விதமாக தனது பட அறிவிப்பை தள்ளி வைத்துவிட்டார். விரைவில் பட அறிவிப்புக்கான மறுதேதி வெளியாகும் என ஹன்சிகா டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், ஹன்சிகா, தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். எப்போதும் தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார், ஆனால் இந்தாண்டு தத்தெடுக்கவில்லை. மும்பையில் முதியோர் இல்லம் ஒன்றை ஹன்சிகா கட்டி வருகிறார். இதனால் இந்தாண்டு அவர் குழந்தையை தத்தெடுக்கவில்லையாம்.