விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ஸ்ரீகணேஷ் இக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் '8 தோட்டாக்கள்'. பல தரப்பினராலும் பாராட்டப்பட்ட இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி. பத்துக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தவர் இவர். இப்போது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 'சர்வம் தாளமயம்' படத்தில் நடித்துள்ளார்.
சர்வம் தாள மயம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அப்படம் தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே மற்றொரு தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படத்தை 'நாளைய இயக்குனர்' புகழ் ராசு ரஞ்சித் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் தான் அபர்ணா பாலமுரளி, கதாநாயகியாக நடிக்கிறார்! இந்த படத்தில் மூன்று கதாநாயகன்களாக இயக்குநர் ராசு ரஞ்சித், தாஸ், சந்தீப் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷனும், எமோஷனும் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
சர்வம் தாளமயம் படம் வெளி வந்த பிறகு அபர்ணா பாலமுரளிக்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் தேடி வரும் என்று ராஜீவ்மேனனே சொன்னாராம். இதனால் அதன் ரிலீஸ் தேதியை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறார்.