வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைவுக்கு மொழிகள் தாண்டி, இந்தியா முழுதும் இருந்து அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். நேரில் அஞ்சலி செலுத்த வர இயலாதவர்கள் சோஷியல் மீடியா மூலம் தங்களது இரங்கலை வெளிப்படுத்தினார்கள். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலும், கருணாநிதியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு மூத்த அரசியல்வாதி, திரையுலகின் ஜீனியஸ், சமூக நீதிக்காக போராடியவர், இதற்கெல்லாம் மேலாக சிறந்த மனிதநேயம் கொண்டவர் இன்று நம்முடன் இல்லை. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய மிகவும் சக்தி வாய்ந்த ஒருவரை நமது தலைமுறை இழந்து விட்டது. கலைஞரின் குடும்பத்தினருக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என கூறியுள்ளார் மோகன்லால்.