டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திமுக., தலைவர் கருணாநிதி, சென்னையில் காலமானார். அரசியலையும் தாண்டி சினிமாவில் சிறந்த படைப்பாளராகவும் கருணாநிதி இருந்தார். சினிமாவில் ஏராளமான படங்களுக்கு கதை, வசனமும், பாடல்களும் எழுதியுள்ளார்.
கருணாநிதி முதன்முதலாக வசனகர்த்தாவாக அறிமுகமான முதல் திரைப்படம் 1947-ம் ஆண்டு எம்ஜிஆர்., நடிப்பில் வெளியான ராஜகுமாரி. தொடர்ந்து, மந்திரி குமாரி", மருத நாட்டு இளவரசி", அபிமன்யு", பராசக்தி", மனோகரா", மணமகள்", பணம்", திரும்பிப்பார்", மலைக்கள்ளன்", ரங்கோன் ராதா", ராஜா ராணி", புதையல்", புதுமைப்பித்தன்", அரசிளங்குமரி", குறவஞ்சி", தாயில்லாப்பிள்ளை", இருவர் உள்ளம்", காஞ்சித்தலைவன்", பூம்புகார்", பூமாலை", அவன் பித்தனா?", பிள்ளையோ பிள்ளை", காலம் பதில் சொல்லும்", பாலைவன ரோஜாக்கள்", நீதிக்கு தண்டனை", பாடாத தேனீக்கள்", பாசப்பறவைகள்", நியாய தராசு", காவலுக்கு கெட்டிக்காரன்", மதுரை மீனாட்சி", புதிய பராசக்தி", மண்ணின் மைந்தன்", கண்ணம்மா", பாசக்கிளிகள்", உளியின் ஓசை", பெண் சிங்கம்", இளைஞன்", பொன்னர் சங்கர்" ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், பூம்புகார் புரடக்ஷன்ஸ், ஆகிய நிறுவனங்களில் தயாரிப்பில், "நாம்", ரங்கோன் ராதா", பூம்புகார்", பூமாலை", குறவஞ்சி", மறக்க முடியுமா", காஞ்சித்தலைவன்", எங்கள் தங்கம்", அணையா விளக்கு", பிள்ளையோ பிள்ளை", பூக்காரி", பாசக்கிளிகள்", ஆடு பாம்பே", குற்றவாளிகள்" மாடிவீட்டு ஏழை", பாடாத தேனீக்கள்", பாசமழை" பாசப்பறவைகள்", வண்டிக்காரன் மகன்", புயல் பாடும் பாட்டு" போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
கருணாநிதி எழுதிய பிரபலமான பாடல்கள்...
காகித ஓடம் - மறக்க முடியுமா - இசை - டி கே ராமமூர்த்தி
பொது நலம் - ரங்கோன் ராதா - இசை - டி ஆர் பாப்பா
நினைத்து வந்த செயல் ஒன்று - காஞ்சித்தலைவன் - கே வி மகாதேவன்
உலவும் தென்;றல் காற்றினிலே - மந்திரி குமாரி - இசை - ஜி ராமநாதன்
வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி - இசை - ஜி ராமநாதன்
பேசும் யாழே பெண்மானே - நாம் - இசை - சி எஸ் ஜெயராமன்
மனமில்லா மலருக்கோ மகிமை இல்லை - நாம் - இசை - சி எஸ் ஜெயராமன்
தீனா மூனா கானா - பணம் - இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி
பூமாலை நீயே - பராசக்தி - இசை - ஆர் சுதர்சனம்
கா...கா...கா... ஆகாரம் உண்ண - பராசக்தி - இசை - ஆர் சுதர்சனம்
வாழ்கை எனும் ஓடம் - பூம்புகார் - இசை - ஆர் சுதர்சனம்
சிரிப்பு சிரிப்பு இதன் சிறப்பை - ராஜா ராணி - இசை - டி ஆர் பாப்பா
காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கி சட்டைக்காரன் - காவலுக்கு கெட்டிக்காரன் - இசை - இளையராஜா
சோழ வளநாடு எங்கள் சொந்தம் என்று பாடு - உளியின் ஓசை - இசை - இளையராஜா
1. எம் ஜி ஆருக்கும் கருணாநிதிக்கும் முதன் முதலில் நட்பு ஏற்பட்டது சேலம் "மாடர்ன் தியேட்டர்ஸில்"