பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க கதாநாயகியாக வளர்ந்து வருபவர் அனு சித்தாரா. தற்போது மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள ஒரு குட்டநாடன் பிளாக் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் அனு சித்தாரா.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனு சித்தாரா, இந்தப்படத்தில் தனக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்கிற சுவாரஸ்யமான விஷயத்தை மேடையில் பகிர்ந்துகொண்டார்.
அதாவது மம்முட்டியை வைத்து ஒரு குட்டநாடன் பிளாக் என்கிற படத்தை கதாசிரியராக சேது இயக்குகிறார் என செய்தி வெளியானபோது, அதையடுத்து இந்தப்படத்தில் அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என இணையதளம், யூ டியூப் ஆகியவற்றில் ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததாம்.
ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். திடீரென ஒரு நாள் அதுவும் அனு சித்தாராவின் பிறந்தநாளன்று, அவரிடம் போனில் பேசிய மம்முட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதோடு, இந்தப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்தினாராம்.