'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காலா படத்தை அடுத்து அமீர்கான் நடிக்கும் ஹிந்திப்படத்தை பா.ரஞ்சித் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதன் பிறகு என்ன நடந்ததோ... பா.ரஞ்சித் படத்தில் அமீர்கான் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில், பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜ்தி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பியான்ட் த க்ளவுட்ஸ் ('Beyond The Clouds') என்ற ஹிந்தி படத்தை தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான நம பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் ஹிந்திப்படத்தை பா.ரஞ்சித் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருக்கிறது. பா.ரஞ்சித் திடீரென பாலிவுட்டுக்குப் போனது ஏன்? அண்மையில் பா.ரஞ்சித்துடன் நட்பான குஜராத் எம்.எல்.ஏ.,வான ஜிக்னேஷ் மேவானியின் முயற்சியிலேயே அவருக்கு ஹிந்திப்பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.