ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாடோடிகள் படத்தின் மூலம் பிரபலமானவர் அபிநயா. செவி மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள இவர், அந்த குறை வெளியில் தெரியாத அளவிற்கு நடித்து புகழ்பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு குற்றம் 23, செஞ்சிட்டாளே என் காதல, விழித்திரு படங்களில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில் குற்றம் புரிந்தால் என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். யுவிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அமராவதி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரிக்கும் படம். ஹீரோவாக ஆதிக்பாபு அறிமுகமாகிறார். ஹீரோயினாக அர்ச்சனா அறிமுகமாகிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி.சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டிஸ்னி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் கூறியதாவது: யாரென்றே தெரியாத நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சளால் விரக்தியடைந்த நாயகன், தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறேன். என்றார்.