ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் தான் மலையாள நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார் நடிகர் மோகன்லால். அதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே நடிகை விவகாரத்தில் சிக்கி சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.. இதற்கு நடிகைகள் தரப்பில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சிலர் சங்கத்தை விட்டும் விலகினர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட நடிகை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும், ஒரு பெண் நீதிபதியும் நியமிக்கப்பட்ட வேண்டும் என மோகன்லால் வேண்டுகோள் வைத்தார். இதற்கு சங்கத்தில் உள்ள திலீப் ஆதரவாளர்களிடம் இருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
திலீப் பக்கம் தவறு இல்லையென்றால் அவர் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என கூறியுள்ள மோகன்லால், இப்படி தேவையற்ற பிரச்னைகளுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தால், தலைவர் பொறுப்பை விட்டே தான் விலகிவிடுவேன் என எச்சரித்துள்ளார்.