டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா நட்சத்திரங்கள் நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வதும் அதற்கு பெருங்கூட்டம் கூடுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் சில நேரங்களில் அதுவே சோகத்தில் முடிந்துவிடும் அபாயமும் உண்டு. நடிகர் துல்கர் சல்மான் நேற்று கேரளாவில் கொட்டராக்கராவில் புதிய மால் ஒன்றை திறந்துவைக்க வந்தபோதும் கூட்ட நெரிசலில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேமம் என்கிற பகுதியை சேர்ந்த ஹரிலால் என்கிற அந்த இளைஞர் துல்கர் சல்மானை பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விரைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத காரணத்தால் அவரது உயிர் வழியிலேயே பிரிந்ததாக சொல்லப்படுகிறது.
முன்னாள் டிஜிபி ஜேக்கப் பொன்னூஸ் என்பவர் நட்சத்திரங்கள் இதுகுறித்த விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என துல்கரின் பெயரை குறிப்பிடாமல் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.