பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ், சமீபத்தில் மாரடைப்பால் இறந்தார். விரைவில் இங்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் போட்டியிட, தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்த நடிகர் விஷால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் களமிறங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தனக்கு திரட்டித் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு போட்டியிடும் பட்சத்தில், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும் தகவல் திரட்டிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடும் என அறிவித்திருக்கும் நடிகர் கமல், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து, நிறைய யோசிக்க துவங்கி இருக்கிறார். எடுத்ததுமே, பணம் மற்றும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆளும்கட்சியினர் மோதும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, மோசமாக தோல்வியடைந்து விட்டால், எடுத்ததுமே எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும் என யோசிக்கத் துவங்கி இருப்பதாக, மக்கள் நீதி மையம் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.