பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வாராகி என்பவர் தயாரித்து, நடித்திருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இது இரண்டு அரசியல் பிரமுகர்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி பேசுகிற படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் தணிக்கைக்கு சென்றபோது அதைப் பார்த்த அதிகாரிகள், மற்றும் உறுப்பினர்கள் 20 காட்சிகள் வரை நீக்க வேண்டும், படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றார்கள். அதற்கு வாராகி மறுக்கவே சான்றிதழ் தர மறுத்து விட்டது தணிக்கை குழு.
இதைத் தொடர்ந்து வாராகி படத்தை மறுதணிக்கைக்கு கொண்டு சென்றார். மறுதணிக்கை குழுவினர் படத்தை பார்த்து விட்டு சில காட்சிகளை நீக்கி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றனர். படத்தின் தலைப்பை மாற்றாவிட்டால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.
இதுகுறித்து வாராகி கூறும்போது: நாட்டு நடப்பைத் தான் படமாக எடுத்துள்ளேன். தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. நடிகை கவுதமி தலைமையில் மறு தணிக்கை குழுவினர் படத்தின் தலைப்பை மாற்றச் சொன்னார்கள் மறுத்துவிட்டேன். டில்லியில் மறு தணிக்கைக்கு படத்தை கொண்டு செல்வேன். அங்கும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் செல்வேன். என்றார்.