மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் விளம்பர படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் ராட்டையில் நூல் நூற்பது போன்று நடித்தார். இதற்கு கேரள மாநில காதி வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து கேரள காதி வாரிய தலைவர் ஷோபனா ராஜ் கூறியதாவது:
ராட்டை நமது தேசிய அடையாளம். காந்தியத்தின் அடையாளம். ராட்டை மூலம் காதி துணிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஆனால் காதிக்கும், ராட்டைக்கும் தொடர்பே இல்லாத ஒரு விளம்பரத்தில் மோகன்லால் ராட்டையை பயன்படுத்தி நடித்திருக்கிறார். இதன் மூலம் ராட்டை குறித்து மக்களிடம் தவறான புரிதல் ஏற்படும். காதி துணிகள் என்ற பெயரில் போலி துணிகள் வியாபாரத்துக்கு வரும் ஆபத்து உள்ளது. இதையட்டி, மோகன்லாலுக்கும், கடை நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்றார்.