தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் இருந்து அவருடன் பயணித்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-அக்சய்குமார் நடித்துள்ள மெகா படமான 2.ஓ படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், டைரக்டர் ஷங்கரைப் பொறுத்தவரை எந்த விசயத்திலும் எளிதில் சமரசமடைய மாட்டார். அவரை திருப்திப்படுத்துவது ரொம்ப கடினமான விசயம்.
மேலும், 2.ஓ படத்தில் ஒரு பாடலை பார்த்தேன். எந்தவித கிராபிக்ஸ் பணிகளும் இல்லாமல் வித்தியாசமான முறையில் அவர் படமாக்கியிருந்தது மனதை டச் பண்ணி விட்டது. இதெல்லாம் ஷங்கரால் மட்டுமே சாத்தியம். அவரைப்போன்ற ஒரு சிறந்த சிந்தனையாளரை நான் ரொம்பவே மதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.