ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நரகாசூரன்'. அர்விந்த் சாமி, சந்தீப், ஆத்மிகா, ஸ்ரேயா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை முதலில் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்து வந்தார்.
ஆனால், தொடர்ந்து படத்தை முடிக்காமல் அவர் தாமதம் செய்ததால் கார்த்திக் நரேன் கடுப்பாகி தகராறில் ஈடுபட்டார். எனவே வேறு வழியில்லாமல் நரகாசூரன் படத்தயாரிப்பிலிருந்து கவுதம் மேனன் விலகிக் கொண்டார். தற்போது அந்தப்படத்தை ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளது.
இந்நிலையில், நரகாசூரன் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி 'நரகாசூரன்' படம் உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரிலீஸ் செய்யும் நேரத்தில் யாரும் பஞ்சாயத்து பண்ணாமல் இருக்க வேண்டும் என கலக்கத்தில் உள்ளார் கார்த்திக் நரேன்.