'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடித்துவரும் சைரா நரசிம்ம ரெட்டி படம் உருவாக்கி வருகிறது. அமிதாப், நயன்தாரா, விஜய்சேதுபதி, சுதீப், தமன்னா, ஹுமா குரேஷி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன் பெய்த மழையால் படப்பிடிப்பு அரங்குகள் சேதமானதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் ஐதராபாத் பூத் பங்களா பகுதியில் இந்த படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்குகள் உரிய அரசு அனுமதி பெற்று அமைக்கப்படவில்லை என கூறி, வருவாய் துறை அதிகாரிகள் அரங்குகளை இடித்து தள்ளியுள்ளார்களாம். இந்த இடத்தை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்ட நிலத்திற்கு சொந்தக்காரர், இதுகுறித்த தகவலை வருவாய் துறைக்கு தெரிவிக்காததால் ஏற்பட்ட சிக்கலே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது