ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இரண்டாவது படம் நரகாசூரன். இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித், கிட்டி ஆகியோருடன் ஆத்மிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மலைப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தான் நடைபெற்று வந்தது. அப்போது, ஒருநாள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, நரகாசூரனில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் சந்தீப் கிஷன், இந்திரஜித் ஆகிய இருவரும் சில மரங்கள் காற்றில் பயங்கரமாக ஆடியதைக் காண்பித்து அங்கே பேய் இருப்பதாக ஆத்மிகாவை அச்சுறுத்தியிருக்கிறார்கள். இதனால், பயந்து போன ஆத்மிகா, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற ஒவ்வொரு நாள் இரவிலும் பயந்து நடுங்கியபடியே நடித்ததாக சொல்கிறார்.