தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துருவங்கள் 16 படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நரகாசூரன். அரவிந்த்சாமி, சந்தீப்கிஷன், இந்திரஜித், கிட்டி, ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆகஸ்ட் 31-ந்தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் டிலைர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பட நாயகன் அரவிந்த்சாமி பேசுகையில்,
இந்த படத்தில் நடிப்பதற்கு கார்த்திக் நரேன் என்னை சந்தித்தபோது, எனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். உங்கள் கதைக்குள் நான் வந்து விடுகிறேன் என்று சொன்னேன். அந்த வகையில் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதையை நன்றாக படமாக்கியிருக்கிறார் அவர்.
என்னுடன் சந்தீப் கிஷன், இந்திரஜித், கிட்டி, ஸ்ரேயா, ஆத்மிகா என பலரும் நடித்திருக்கிறார்கள். அவரவர் வேலையை அழகாக செய்திருக்கிறார்கள். அதனால் படமும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
நான் ஏற்கனவே சொன்னது போன்று, கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு. அவர் நிறைய வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுப்பார் என்றார்.