பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'குற்றமே தண்டனை', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்கு பொம்மை' என படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார் விதார்த். ஆனால் அவருக்கு வணிக வெற்றியும் நட்சத்திர அந்தஸ்த்தும் கிடைக்கவே இல்லை.
தற்போது ராதா மோகன் இயக்கத்தில் 'காற்றின் மொழி' படத்தில் நடித்து வருகிறார் விதார்த். ஜோதிகாவை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படத்தினால் விதார்த்துக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை.
அதேநேரம் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான 'ஆயிரம் பொற்காசுகள்' படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படம் தனக்கு பெரிய பிரேக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் விதார்த்.
இந்நிலையில் அடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் ஒன்றில் நடிக்கிறார். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அறிவுநிதி இயக்கும் படம் இது. அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் உள்ள பாசப்போராட்டத்தை வித்தியாசமாக சொல்லும் கதையாம்!
இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.