பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். திருமணத்திற்கு பிறகு அந்த அளவிற்கு இணைந்து நடிக்கவில்லை. கடைசியாக 2010ம் ஆண்டு வெளிவந்த ராவண் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இதனை மணிரத்னம் இயக்கியிருந்தார்.
அதன்பிறகு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். படத்திற்கு குளோப்ஜாமுன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதனை அனுராக் காஷ்யப் தயாரித்து இயக்குகிறார்.
குலாப்ஜாமுன் கதையை ஒரு வருடத்திற்கு முன்பே அனுராக் காஷ்யப், அபிஷேக், ஐஸ்வர்யா இருவரிடம் கூறி ஒப்புதல் பெற்றிருந்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்கவில்லை. இப்போது இருவரும் தேதி ஒதுக்கி கொடுத்திருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அபிஷேக்கிற்க பிடிக்கவில்லை. இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.