மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண்கள் கவர்ச்சி உடை அணிந்து வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நடிகைள் யாஷிகா, ஐஸ்வர்யாவின் உடைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் பொன்னம்பலம் நிகழ்ச்சியை நடத்தும் கமலிடம் புகார் கூறினார். அதற்கு பதில் அளித்து அந்த நிகழ்ச்சியிலேயே கமல் கூறியதாவது:
நீங்கள் ஆடையில்தான் கலாசாரம் இருக்கிறது என்கிறீர்கள். ஒரு விஷயம் இங்கு சொல்கிறேன். நூறு நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை ஜாக்கெட் அணியாத பெண்களே அதிகம் இருந்தார்கள். அதன்பிறகும் அது தொடர்ந்தது. அவர்கள் எனக்கு தெரிந்து நல்லவர்கள் தான். என் பாட்டி அவருடையை 28 வயதில் கணவரை இழந்தார். முடியை மழித்து முக்காடு போட்டுக்கொண்டு 95 வயதுக்கும் மேலாக அவர் வாழ்ந்தார். அவரை நான் பார்த்து இருக்கிறேன்.
அதே சமயம் கணவரை இழந்து வெளிஉலகுக்கு வந்த இந்திரா காந்தியையும் பார்த்து இருக்கிறேன். பாட்டியோ படிக்கிற பையனுக்கு எதிராக கூட போகமாட்டார். இந்திரா காந்தியோ ஐ.நா சபைக்கே போய் பேசிவிட்டு வந்தார்.
இதை எப்படி பார்ப்பீர்கள்? ஆடை என்பதற்கும் கலாசாரம் என்பதற்கும் எந்த ஒற்றுமையும் இருப்பதாக தெரியவில்லை. இப்படியெல்லாம் சொன்னால் ஒரு பெண் என்னதான் செய்யமுடியும்? இங்கே இருக்கும் யாஷிகா எனக்கு சுருதியாகத்தான் தெரிகிறார். எனது இரண்டு மகள்களின் ஆடை விஷயத்தில் நான் எதுவும் சொல்வது இல்லை. அது பார்ப்பவர்களின் கண்களை பொருத்தது.
இவ்வாறு கமல் கூறினார்.