இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகி பாபு. இவர் இல்லாத படங்களே இப்போது இல்லை என்பது தான் நிலை. சிறு பட்ஜெட் படங்கள் முதல் அஜித், விஜய் படங்கள் வரை நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பெயரில் சில டுவிட்டர் கணக்குள் தொடங்கப்பட்டு இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் யோகிபாபுவை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதனால் அதிர்சி அடைந்த யோகி பாபு, ஒரு வீடியோ விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
கடந்த 2, 3 நாட்களாக டுவிட்டரில் அரசியல் தலைவர்களை நான் கேலி செய்வதுபோல் கருத்துக்கள் வருகின்றன. நான் அவ்வாறு சொல்லவில்லை. எனது பெயரில் டுவிட்டரில் சில போலி கணக்குகள் உள்ளன. அவற்றில் இருந்துதான் இதுபோன்ற தவறான தகவலை வெளியிடுகிறார்கள். அவற்றை யாரும் பின்பற்ற வேண்டாம். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்று கூறியுள்ளார்.