மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தமிழ் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மீதும் அவர் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீரெட்டி பிரச்னை பற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது எனக்கு ஒரு பெரிய விஷயம் அல்ல. அதை பற்றி நான் கவலைப்படவும் இல்லை. ஆனால் மக்களும், மீடியாக்களும் இதுபற்றி தெளிவுபடுத்துமாறு கூறுகிறார்கள். அதனாலேயே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன். அதற்கான சரியான நேரம் இதுவென்று நினைக்கிறேன்.
7 வருடங்களுக்கு முன்பு என்னை சந்தித்ததாக கூறியுள்ள ஸ்ரீரெட்டியிடம் கேட்கிறேன். இத்தனை ஆண்டுகள் இதைப் பற்றி கூறாமல் இப்போது ஏன் கூறுகிறீர்கள். என் ஓட்டல் அறைக்கு வந்ததாகவும் அங்கு சாமி படங்களையும் ருத்ராட்ஷ மாலைகளையும் பார்த்தாக கூறியுள்ளீர்கள். ஓட்டல் அறையில் சாமி படம் வைத்து வணங்க நான் முட்டாள் அல்ல.
எனக்குத் தெரிந்து நான் எந்த தவறும் செய்யவில்லை. அது எனக்கும் தெரியும், கடவுளுக்கும் தெரியும். ஸ்ரீரெட்டியின் மீது எனக்கு கோபம் இல்லை. அவரது எல்லா பேட்டிகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அதில் பலரும் அவருக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றியதாக கூறியிருக்கிறார். அவருக்கு நான் வாய்ப்பு தருகிறேன்.
ஒரு பத்திரிகையாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அங்கு நீங்களும் வாருங்கள். சில காட்சிகளை சொல்கிறேன் நடித்து காட்டுங்கள், சில எளிய நடன அசைவுகளை சொல்கிறேன் ஆடிக்காட்டுங்கள். அதில் நீங்கள் தேர்வாகிவிட்டால் எனது அடுத்த படத்தில் உங்களை நடிக்க வைக்கிறேன். பத்திரிகையாளர் முன்னால் நடிக்க தயக்கமாக இருந்தால் உங்கள் வழக்கறிஞரையும், நண்பர்களையும் அழைத்துக் கொண்டு தனி இடத்தில் இதனை செய்து காட்டுங்கள். இப்படிச் சொல்வது உங்கள் மீதுள்ள பயத்தால் அல்ல, அனுதாபத்தால்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.