'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தானத்தின் நிலைமை புலிவாலைப்பிடித்த கதையாகிவிட்டது. காமெடியனாக நடித்து வந்த அவர் ஒருகட்டத்தில் ஹீரோக்களைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார். காமெடியனாக மிகப்பெரிய உயரத்தில் இருந்தவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை ஏற்பட்டதால் இப்போது கடும் சிக்கலில் இருக்கிறார்.
அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான சக்கப்போடு போடு ராஜா படம் ஏற்படுத்திய நஷ்டம் ஒருபக்கம், அந்தப்படத்தினால் நஷ்டம் அடைந்தவர்களுக்கு இரண்டரை கோடி திருப்பிக்கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார் சந்தானம்.
அதனால் அவருடைய படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்துவருகிறது. சர்வர் சுந்தரம் படம் கூட வெளிவராமல் முடங்கிப்போனதன் காரணம் இதுவே.
இந்த நிலையில் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து வெளியிட முடிவு செய்துள்ளார். இந்த படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மார்ச் மாதம் 1-ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்கியது. 'தில்லுக்கு இரண்டாம் பாகத்தில் தீப்தி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இப்போது கேரளாவைச் சேர்ந்த ஏற்கெனவே சில மலையாள படங்களில் நடித்துள்ள ஷ்ரதா சிவதாஸ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கதைப்படி கதாநாயகி கேரக்டர் மலையாளம் பேசுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதால் மலையாள நடிகையான ஷ்ரதா சிவதாஸை தேர்வு செய்துள்ளனர்.