பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
'கடம்பன்' படத்தை அடுத்து ஒரு வருடத்திற்குப் பிறகு ஆர்யா நடித்து அடுத்தவாரம் வெளிவர உள்ள படம் 'கஜினிகாந்த்'. 'ராஜா ராணி' படத்திற்கு பிறகு பெரிய வெற்றி எதுவும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அதனால், இந்தப் படத்தின் வெற்றியைப் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா.
'கஜினிகாந்த்' படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்த போது ஆர்யாவுக்கு படத்தின் மீதிருந்த ஆர்வத்தைப் பற்றி இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு படம் முடிந்த பின்னும் இயக்குனரைப் பற்றி நாயகனும், நாயகனைப் பற்றி இயக்குனரும் பாராட்டிப் பேசிக் கொள்ளும் அற்புதக் காட்சியை நேற்றும் காண முடிந்தது.
இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் பேசும் போது, “இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டதும் நான் இயக்கிய முதல் படத்தைக் கூடப் பார்க்காத ஆர்யா உடனே சம்மதித்தார். ஒரு வாரத்திற்குள்ளாக அனைத்தும் முடிவாகி படப்பிடிப்பிற்குச் சென்றுவிட்டோம். ஆர்யாவிற்கு படப்பிடிப்பு மதியம் இருந்தால் கூட அவரே போன் செய்து வீட்டில் போரடிக்கிறது காலையிலேயே படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லி முன்னதாகவே வந்துவிடுவார்,” என்று பாராட்டினார்.
ஆர்யா போல அனைத்து ஹீரோக்களும் படப்பிடிப்பு முன்னதாகவே வந்துவிட்டால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எவ்வளவு மகிழ்ச்சியடையவார்கள்.