'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டுமல்ல கேரளா, தமிழ்நாட்டிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அல்லு அர்ஜுனின் தெலுங்குப் படங்கள் அனைத்தும் மலையாளத்தில் பெரிய வரவேற்பைப் பெறும் படங்கள்.
அவர் நடித்த தெலுங்குப் படங்கள் எதுவுமே தமிழில் டப்பிங் ஆனதில்லை. ஆனால், முதல் முறையாக அவர் நடித்த 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் மட்டும் 'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா' என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்தது. தெலுங்கிலும் எதிர்பார்த்த அளவிற்குப் பெரிய வெற்றியைப் பெறாத படம், தமிழில் மற்ற டப்பிங் படங்களைப் போலவே காணாமல் போனது.
'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் வெளிவந்து நான்கு மாதங்கள் ஆகப் போகிறது. அல்லு அர்ஜுனின் அடுத்த படம் என்ன என்பது குறித்து அவரது ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகிறார்கள். உடனடியாக அவர் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். இதனிடையே, நேற்று அல்லு அர்ஜுன் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், “எனது அன்பான ரசிகர்களே, உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்புக்குக் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நான் அனைத்தையும் உங்களிடம் சொல்வேன். அதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும். நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என உண்மையாக கருதுகிறேன். அதற்கு நாளாகும், புரிந்து கொண்டதற்கு நன்றி,” எனக் கூறியிருக்கிறார்.