மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிக்க உள்ள படம் வரும் நவம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' என தற்போதைக்கு அழைக்கப்படும் அந்தப் படத்திற்காக மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திய அரங்காக அது நியமிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அதற்கு அருகிலேயே மற்றொரு ஒரு அழகான வீடும் கட்டப்பட்டிருக்கிறதாம். அந்த வீடு ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினர், உதவியாளர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ளதாம். 2 கோடி ரூபாய் செலவில் அந்த வீட்டைக் கட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படங்களின் போது அந்தப் படப்பிடிப்பு நடந்த ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள ஹோட்டல்களிலேயே அவரும், அவருடைய உதவியாளர்களும் அனைத்து வேலைகளும் முடியும் வரை தங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது போலவே புதிய படத்திற்காகவும் அமைத்திருக்கிறார்களாம்.
படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடி செலவில் உருவாகும் போது அதில் ரூ.2 கோடியை இயக்குனரின் வசதிக்காக செய்வதில் தப்பில்லை என்கிறது டோலிவுட் வட்டாரம். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தவராயிற்றே ராஜமவுலி, அவருக்காக ராஜ உபச்சாரம் இல்லை என்றால் எப்படி....?.