ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடித்த படம் எந்திரன். 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி வசூல் சாதனை படைத்த படம். 2010ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 2.ஓ என்ற பெயரில் தயாராகி வருகிறது.
எந்திரன் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் "1996ம் ஆண்டு உதயம் என்ற பத்திரிக்கையில் ஜூகிபா என்ற பெயரில் தொடர்கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் ஷங்கர் படமாக எடுத்துள்ளார். இதன் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதித்துள்ளனர். எனவே எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. படத்தின் இயக்குனர் ஷங்கர் தனது தரப்புக்கான ஆதாரங்களை தாக்கல் செய்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆவணங்களை தாக்கல் செய்த ஷங்கர் தான் ஆஜராகாமல் தன் உதவியாளரை அனுப்பி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஷங்கர் தொடர்ந்து படப்பிடிப்பு பணியில் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். "ஷங்கருக்காக நீதிமன்றத்தை படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு மாற்ற முடியாது" என்று கூறிய நீதிபதி "ஷங்கர் வருகிற ஆகஸ்ட் 1ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார். இவை அனைத்தும் ஆகஸ்ட் 8ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.