டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் சீமராஜா. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களை தொடர்ந்து பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகிறது.
சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன் படங்களை தயாரித்த ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இமான் இசை அமைத்துள்ளார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கிராமங்களில் இப்போதும் ஜமீன்தார்கள் இருக்கிறார்கள். அவர்களை ஊரே ராஜாவாகத்தான் பார்க்கும். அப்படி ஒரு குடும்பத்தின் கதை. அந்த குடும்பத்து இளம் வாரிசு, அதாவது சீமராஜா சிவகார்த்திகேயன், தனது நண்பர்கள் சூரி, யோகிபாபு, அபு ஆகியோருடன் இணைந்து நடத்தும் ஆக்ஷ்ன், காமெடி, காதல் கலாட்டாக்கள் தான் படம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சத்யராஜ், ரஜினி முருகனில் ராஜ்கிரண் நடித்த மாதிரி இந்தப் படத்தில் நெப்போலியன், சிவகார்த்திகேயனின் தந்தையாக நடித்துள்ளார்.
கிராமத்தில் மாணவர்களுக்கு சிலம்பாட்டம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக நடித்திருக்கிறார் சமந்தா. அவரது கேரக்டரின் பெயர் சுதந்திரதேவி. இந்த கேரக்டரில் நடிப்பதற்காக 3 மாதங்கள் வரை முறைப்படி சிலம்பம் கற்றுக் கொண்டார் சமந்தா.
சிம்ரன் தான் டெரரர் வில்லி. அவர் சீமராஜா குடும்பத்தை அழிக்க நினைக்கும் இன்னொரு பெரிய குடும்பத்து ராணி.
கீர்த்தி சுரேஷ், கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். சமந்தா, சிவகார்த்திகேயன் காதல் தீவிரமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் முறைப்பெண் கீர்த்தி சுரேசை வரவழைத்து, சிம்ரன் ஒரு ஆட்டத்தை ஆரம்பிப்பார். அதை கீர்த்தி எப்படி முடித்து வைக்கிறார் என்பதுதான் அவரது கேரக்டர் என்று கசிந்திருக்கிறது கதை.
ரஜினி முருகன் படத்தின் கிளைமாக்சில் இன்னொரு சிவகார்த்திகேயன் வந்து படத்தை முடிப்பது போன்று இதிலும் கடைசி நேர திருப்பம் ஒன்று இருக்கிறது அது சஸ்பென்ஸ். குடும்பத்துக்கு தேவையான ஒரு மெசேஜும் படத்தில் இருக்கிறதாம்.
படம் வருகிற செப்டம்பர் மாதம் 13-ம் தேதி வெளிவருகிறது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங், எடிட்டிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.