பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் சினிமாவில் அடுத்த ஐந்து மாதங்களில் பல பெரிய நடிகர், நடிகைகளின் படங்கள் வெளிவர உள்ளன. குறிப்பாக ஆகஸ்ட் 10-ம் தேதி கமல்ஹாசன் நடித்துள்ள 'விஸ்வரூபம் 2', 17ம் தேதி நயன்தாரா நடித்துள்ள 'கோலமாவு கோகிலா', செப்டம்பர் 13ல் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா', சமந்தாவின் 'யு டர்ன்', அக்டோபர் 18-ல் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2', நவம்பர் 29ம் தேதி ரஜினிகாந்த்தின் '2.0' ஆகிய முக்கிய படங்கள் வருகின்றன.
பொதுவாகவே தீபாவளிக்கு வரும் படங்கள் மீது எப்போதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த விதத்தில் இந்த வருட தீபாவளிக்கு அஜித்தின் 'விஸ்வாசம்', விஜய்யின் 'சர்கார்', சூர்யாவின் 'என்ஜிகே' ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட 'என்ஜிகே' பட இரண்டாவது போஸ்டரில் பட வெளியீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. படத்திற்கான பல காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். அது போலவே, 'விஸ்வாசம்' படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் செப்டம்பர் வரை நடக்கலாம் என்கிறார்கள். அதனால், இரண்டு படங்களுமே தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் பதினைந்து நாட்கள் நடந்ததும் முடிந்து விடுகிறதாம். ஏற்கெனவே படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. எனவே, தீபாவளிக்கு எந்த ஒரு போட்டியும் இல்லாமல் 'சர்கார்' மட்டும் தனியாக வரும் என்பதுதான் தற்போதைய நிலை. இதுவரை வந்த விஜய் படங்களை விட இந்தப் படத்தை பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.