டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் வலம் வந்தவர் நிஷா. இவரது கணவர் சக்தி முருகன். இவர்கள், சென்னையில் ஸ்கை எக்யூப்மென்ட் என்ற பெயரில் மின்சாதன பொருட்களை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தனர்.
சென்னை, கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் என்பவரின் நிறுவனத்தில் ரூ.37 லட்சத்திற்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியுள்ளனர். இதற்காக அனிஷா செக் கொடுத்திருக்கிறார். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று சொல்லி அந்த செக் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து நிஷாவிடம் பணத்தை கேட்டபோது தர மறுத்தாகவும், பிரசாந்த்தை அனிஷா, அவரது கணவர் சக்தி முருகன் உள்ளிட்டோர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பிரசாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிஷாவை கைது செய்துள்ளனர். சக்தி முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அனிஷா - சக்தி முருகன் மீது டிராவல்ஸ் நடத்துவதாக கூறி மோசடி செய்ததாக புகார் உள்ளதாக கூறப்படுகிறது.