தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களைப் போலவே ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வந்துவிடுகின்றன. இந்த வருடமும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டும் என எதிர்பார்க்கலாம்.
ஜுலை மாமத்தில் வெளிவந்த 'தமிழ்ப் படம் 2, கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு படங்களும் அனைவருக்கும் லாபகரமான படமாக அமைந்ததால் தமிழ்த் திரையுலகம் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறது. இரண்டு படங்களுக்குமே இரண்டு விதமான வெற்றி என்பதுதான் அதற்குக் காரணம். 'தமிழ்ப் படம் 2' இளைஞர்களையும், 'கடைக்குட்டி சிங்கம்' குடும்பத்து ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
ரசிகர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற படங்களைக் கொடுத்தால் நிச்சயம் வெற்றி என்ற நம்பிக்கை பலருக்கு வந்துள்ளது. நாளை மறுநாள் ஜுலை 27ம் தேதி வெளியாக உள்ள படங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக விஜய் சேதுபதி, சாயிஷா நடிக்கும் 'ஜுங்கா' படமும், த்ரிஷா நாயகியாக நடிக்கும் 'மோகினி' படமும் உள்ளன.
'ஜுங்கா' ஒரு டானைப் பற்றிய நகைச்சுவைப் படமாகவும், 'மோகினி' பேய்ப் படமாகவும் கதையைக் கொண்டுள்ளன. விஜய்சேதுபதி, கோகுல் கூட்டணி 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திற்குப் பிறகு மீண்டும் பேசப்படுமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 'மோகினி' படம் வெற்றி பெற்றால்தான் த்ரிஷா நடித்துள்ள அடுத்தடுத்த நாயகி மைய படங்களுக்கும் நல்லது.
'ஜுங்கா' டானுக்கு வெற்றி கிடைக்குமா, அல்லது 'மோகினி' பேய்க்கு வெற்றி கிடைக்குமா என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.